மகளின் உடலை பார்க்க சென்னை வராத இளையராஜா? கடைசி நேரத்தில் ஷாக் தகவல்

tamilnaadi 78

மகளின் உடலை பார்க்க சென்னை வராத இளையராஜா? கடைசி நேரத்தில் ஷாக் தகவல்

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக காணப்படும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில். இலங்கையில் திடீரென மரணமடைந்துள்ளார்.

இதை தொடர்ந்து, விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடல் சென்னை டி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவரின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட் உள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்த மகளின் உடலை பார்க்க இளையராஜா வரவில்லை என்றும், அதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது்

இலங்கையில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த இளையராஜா, தனது மகள் இறந்த செய்தியை கேட்டு உடனடியாக மருத்துவமனை சென்று பார்த்து இருந்தார்.

இவ்வாறான நிலையில், அவர், சென்னை வர முடியாது என்பதால், பவதாரணியின் உடலுக்கு சென்னையில் அவரால் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் அவரது உடல் தேனியில் அடக்கம் செய்யப்ப உள்ளதால், இளையராஜா இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து தனது மகளின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version