tamilni 294 scaled
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த்

Share

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த்

தே.மு.தி.க தலைவரும் தென்னிந்திய தமிழ் நடிகருமான விஜயகாந்த் திடீரென சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு மருத்துவர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்திற்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மருத்துவ சிகிச்சைகளை நிறைவுசெய்து, இன்னும் ஒரீரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானதை அடுத்து , அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக பேச்சில் மாத்திரமல்லாமல், உடல் ரீதியாகவும் தளர்வடைந்துள்ள விஜயகாந்த், பொதுநிகழ்வுகளில் அரிதாகவே பங்கேற்றுவருகின்றார். எழுந்து நடக்க முடியாத ஒருவராக இருக்கும் அவரை, மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கான விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் ஆகியோரே கவனித்துவருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க யாருடன் கூட்டணி அமைக்கும் என விஜயகாந்தே அறிவிப்பார் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அவரது ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனினும் விஜயகாந்தின் உடல்நிலை பற்றி தவறான தகவல்கள் பரவி வருவதாகவும் அவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தே.மு.தி.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...