Untitled 1 54 scaled
சினிமாபொழுதுபோக்கு

ரவீந்தர் மீது விஜய் பரபரப்பு புகார்

Share

தயாரிப்பாளராக பலராலும் அறிப்பட்டவர் தான் ரவீந்தர். இவர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர்

இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை போன வருடம் திருமணம் செய்து கொண்டார். சிலர் வாழ்த்து கூறி இருந்தாலும் பலர் எதிர்மறை விமர்சனக்கருத்தையே முன்வைத்தார்கள். ஆனாலும் இத்தம்பதி அவ்வாறாக விமர்சனங்களுக்கு செவி சாய்க்காது தமது வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ரவீந்தர் மீது போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவைச் சேர்ந்த விஜய் என்பவரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த ஆண்டு மே மாதம் 8-ஆம் தேதி, நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் எனக் கூறி 20 லட்சம் ரூபாய் பணத்தினை அவரிடம் கேட்டுள்ளார்.

இதற்கு அந்தக் குறித்த நபரான விஜய் “என்னிடம் 20 லட்சம் இல்லை 15 லட்சம் தான் இருக்கிறது. அதை தான் இரண்டு தவணையாக அனுப்புவதாக கூறி இருக்கின்றார். பின்னர் முதலில் 10 லட்சமும், அடுத்த நாள் 5 லட்சமுமாக மொத்தம் 15லட்ஷம் பணத்தை ரவீந்தரினுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.

இவ்வாறாக விஜய்யிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட ரவீந்தர், பணத்தை 16 லட்சமாக ஒரே வாரத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக அவரிடம் கூறியுள்ளார். இருப்பினும் ரவீந்தர் குறித்த தவணைக்குள் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த நபர் ரவீந்தரிடம் பணம் விஷயமாக கேட்டதற்கு, வங்கி விடுமுறை என்றும், செக் அனுப்பிருக்கேன் என்றும் பல்வேறு விதமான காரணங்களை சொல்லி அமெரிக்க நபர் விஜய்யின் செல்போன் நம்பரை பிளாக் செய்துள்ளார். இதன் பின்னர் விஜய்யின் மனைவி, ரவீந்திரனை தொடர்பு தமக்கு தரவேண்டிய பணத்தை கேட்டபோது, அவரை தகாதவார்த்தையால் பேசி இருக்கிறார்.

இதன் காரணமாக கோபமுற்ற விஜய் ஆன்லைன் மூலம் அமெரிக்காவிலிருந்து ரவீந்திரன் பணம் கேட்டதற்கான ஆதாரம், மற்றும் அவர் பணம் கேட்டு பேசிய ஆடியோ போன்றவற்றை வைத்து சென்னை கமிஷ்னருக்கு புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக ரவீந்தர் கூறுகையில் தான் விஜய்யிடம் இருந்து 15 லட்சம் வாங்கியது உண்மை தான் என்றும், ஆனால் இந்த பணத்தினை வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டுவருவதற்கு முடியாமல் தான் விஜய் தன்னிடம் கொடுத்து வைத்ததாகவும்,விஜய்யின் உறவினர்கள் வந்தால் தான் செக்கை கொடுத்துவிடுவேன் என்றும் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 697099df586de
பொழுதுபோக்குசினிமா

இன்று 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சந்தானம்!

சின்னத்திரையிலிருந்து தற்போது பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் வெற்றிக்கனியை பறிக்கிறார்களா என்பதே...

26 69706a9580900
பொழுதுபோக்குசினிமா

50-வது படத்தில் தொடரும் 50 மேஜிக்! ரீ-ரிலீஸிலும் மங்காத்தா படைக்கும் புதிய சாதனை!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘மங்காத்தா’, 15 ஆண்டுகளுக்குப்...

hindutamil prod 2025 11 23 2thuvwy1 3 4 1
பொழுதுபோக்குசினிமா

மத ரீதியான பாகுபாட்டால் வாய்ப்புகள் பறிபோகின்றன: ஏ.ஆர். ரஹ்மானின் கருத்தால் இந்தியாவில் பெரும் சர்ச்சை!

உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் திரையுலகில் நிலவும் மறைமுகமான “மத ரீதியான பாகுபாடு”...

AR Rahman daughters Khatija and Raheema break silence amid backlash over his comments on communal bias in Bollywood
சினிமாபொழுதுபோக்கு

இது விமர்சனம் அல்ல, வெறுப்புப் பேச்சு: தந்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான தாக்குதலுக்கு மகள் கதிஜா கடும் கண்டனம்!

பாலிவுட் திரையுலகம் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கள் பெரும் விவாதத்தை...