jayasri
சினிமாபொழுதுபோக்கு

சுயநினைவை இழந்த பிரபல பாடகி – மருத்துவமனையில் அனுமதி

Share

புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர்.

தமிழில் இவர் பாடிய ‘வசீகரா’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘யாரோ மனதிலே’ உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இவரது மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 15
சினிமாபொழுதுபோக்கு

அந்த காட்சிக்காக இரவு முழுவதும் பயிற்சி செய்தேன்.. ஓப்பனாக சொன்ன மமிதா பைஜூ

மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பின் தொடர்ந்து படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை மமிதா பைஜூ....

4 15
சினிமாபொழுதுபோக்கு

நல்ல பெயர் வரலனா பரவாயில்லை, கெட்ட பெயர் வர வச்சுடாதீங்க- அஜித் வெளிப்படையான பேச்சு

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த...

3 15
சினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் சவுந்தர்யாவிடம் ரூ. 17 லட்சம் பணம் மோசடி.. அவரே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் பெரிய பட்ஜெட்டில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ் 8. இந்த பிக்பாஸ் 8...

2 15
சினிமாபொழுதுபோக்கு

Bigg Boss 9: குறைவான ஓட்டுகள்.. இரண்டாம் வார எலிமினேஷன் இவர்தானா?

பிக் பாஸ் 9ம் சீசனில் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருந்தார்கள். நந்தினி இடையில்...