பிரபல பாலிவுட் நடிகரும் பிரபல நடிகை தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங்கின் , நிர்வாண புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவரும் நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
பிரபல பத்திரிக்கை ஒன்றின்போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்த நிலையில், அவற்றை ரன்வீர் சிங் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
குறித்த புகைப்படங்கள் வரலாகிய நிலையில்,இவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின.
விமர்சனங்களுக்கு பதில் அளித்த ரன்வீர் சிங், எல்லோர் முன்னிலையிலும் நிர்வாணப் படங்களுக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் கடினம் அல்ல. இந்த புகைப்படங்களில் எனது ஆன்மாவை பார்க்க முடியும். ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால் கூட நிர்வாணமாக இருக்க முடியும். ஆனால், சங்கடப்பட்டால் எதுவும் செய்ய முடியாது என்றார்.
இந்த நிலையில், ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்களை, இணையத்தில் பதிவிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
#Cinema
Leave a comment