சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தை நான் கோட்டை விட்டுவிட்டேன் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இனிமேல், விட்ட இடத்தை பிடிக்கப் போகிறேன். இந்த படத்தின் டைரக்டர் முரளிதரன் என்னிடம் வந்து கதை சொன்னபோது, ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடத்தில் நடிக்க முடியுமா? என்று தயங்கி தயங்கி கேட்டார். நடிப்பதற்கு தயார் என்று கூறியதுடன் அவர் மகிழ்ந்தார் என்றும் கூறியுள்ளார்.
வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தொடர்ந்து வில்லியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறேன்.
‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற வில்லியாக நடிக்கவிருக்கிறேன். இந்தப் படத்துக்காக புல்லட்டில் வரும் காட்சி, ‘பந்தா’வாக இருக்கும் என்றும் அத்துடன் உலக மகா வில்லியாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
#CinemaNews
Leave a comment