5000 எம்.ஏ.எச். பட்ரியுடன் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம், புதிய ஈ.சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய சந்தையில் மோட்டோ 40 ஸ்மார்ட்போனினை அடக்கமான விலையில் மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எச்.டி. பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி-700 பிராசஸர், 4 ஜிபி றம் என்பன வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஸ்மார்ட் போனில் ஐ.பி. 52 தர வோட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5000 எம்.ஏ.எச். பட்டரி என்பன வழங்கப்பட்டுள்ளதுடன், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ 40 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டனும் காணப்படுகிறது.
புதிய மோட்டோ 40 ஸ்மார்ட்போனின் விலை இந்திய ரூபாயில் 9,499 ஆகும். இம்மாதம் 17 ஆம் திகதி, குறித்த ஸ்மார்ட் போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment