உலகம்கலாசாரம்செய்திகள்

அமெரிக்காவின் சுதந்திரம் – தங்க ஆடையில் ஜொலித்த இந்தியப் பெண்

gala
Share

அமெரிக்காவின் சுதந்திரம் – தங்க ஆடையில் ஜொலித்த இந்தியப் பெண்

ஆண்டுதோறும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் மெட் காலா பஷன் நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றது.

2021 ஆம் ஆண்டுக்கான ‘மெட் காலா’ அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

“அமெரிக்காவின் சுதந்திரம்“ என்ற கருப்பொருளைக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பாடகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் இந்தியாவில் இருந்து பிரபல தொழிலதிபர் மேகா கிருஷ்ணனின் மனைவி சுதா ரெட்டி முதல்முறையாகக் கலந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் 250 கிலோ எடைகொண்ட ஆடையை அணிந்திருந்தார். அந்த ஆடை முழுக்க முழுக்க தங்கம் மற்றும் வைரங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

sudhareddy

இதேவேளை, பிரபல மாடலான கிம் காதஷியன், கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கறுப்பு நிற ஆடையை அணிந்து கலந்துகொண்டார். இது பெரிதும் வரவேற்பை பெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட அமெரிக்காவின் இளம் எம்.பியான அலெக்சாண்டிரியா ஒகாசியோ கார்டஸ் பேஷன் நிகழ்ச்சியை அரசியல் பேசும் இடமாக மாற்றி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

பல நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் பங்குபற்றும் இந்த நிகழ்வு நியூயோர்க்கில் உள்ள பிரபல கலை அருங்காட்சியத்துக்கு நிதி திரட்டுவதற்காக 1948 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நிகழ்வாகும்.

வருடாவருடம் இடம்பெற்று வரும் இந்த நிகழ்வு, கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கபட்ட நிலையில் இவ்வாண்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

sep17metgala6

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...