1 7 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலை எப்போது வேண்டுமானாலும் தாக்க தயாராக இருக்கும் மற்றொரு நாடு

Share

இஸ்ரேலை எப்போது வேண்டுமானாலும் தாக்க தயாராக இருக்கும் மற்றொரு நாடு

இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாகிய லெபனானிலிருந்து, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சம் உருவாகியுள்ளது.

பால்ச்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளில் ஒன்று லெபனான். இஸ்ரேலுக்கு வடக்கே அதன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள லெபனானில் ஹிஸ்புல்லா என்னும் போராளிக்குழு உள்ளது.

அந்தக் குழு ஈரான் ஆதரவு பெற்ற குழுவாகும். இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர், காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலை தாக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தக் குழுவிடம் 150,000 ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகள் இருக்கலாம் என இஸ்ரேல் கணித்துள்ளது. அத்துடன், 12 ஆண்டு கால நீண்ட சிரியப் போரில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான போராளிகளும் அந்த அமைப்பில் உள்ளனர்.

ஆகவே, இஸ்ரேல் ராணுவம், லெபனான் எல்லையில் அமைந்துள்ள 28 கிராமங்களில் வாழும் மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும், எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ரோந்து செல்லத் துவங்கியுள்ளார்கள்.

பல நாடுகள் ஹிஸ்புல்லா அமைப்பை எந்த தாக்குதலிலும் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள நிலையிலும், நேரம் வரும்போது செயலில் இறங்குவோம் என ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவரான Naim Qassem அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...