tamilni 171 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் எச்சரிக்கை

Share

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் எச்சரிக்கை

சுவாசக்குழாய் தொற்று உள்ள சிறு குழந்தைகளுக்கு கண் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் கண் நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் ஹிரண்ய அபேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் கொழும்பு பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் குழந்தைகளுக்கு கண் நோய் பரவியது.

உலக பார்வை தினத்தை முன்னிட்டு நேற்று கண் வைத்தியசாலையில் நடைபெற்ற மாநாட்டில் வைத்தியரிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொதுவாக சிறு குழந்தைகளுக்கு மூச்சுக்குழாய் தொற்று காரணமாக கண் நோய்கள் பரவுவதாகவும், மூன்று நாட்களுக்கு மேல் இந்நோய் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கண்கள் சிவப்பாக இருந்தால், கண்களில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகமாக இருந்தால், பெற்றோர்கள் கவனம் செலுத்தி, பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல், வீட்டிலேயே தங்க வைத்து, மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலையொன்றில் இவ்வாறான அறிகுறிகளுடன் கூடிய மாணவர்கள் இருந்தால் உடனடியாக நோயுற்ற மாணவர்களை ஏனையவர்களிடம் இருந்து பிரித்து வைப்பது மிகவும் அவசியமானது என விசேட வைத்தியர் ஹிரண்ய அபேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கண் நோய் குறித்து பெற்றோர்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...