உலகம்
நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்காக காத்திருந்த ஜோடி: ஏற்பட்ட சோகம்
நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்காக காத்திருந்த ஜோடி: ஏற்பட்ட சோகம்
இஸ்ரேலில், நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்காக காத்திருந்த ஜோடி ஒன்று, ஹமாஸ் தாக்குதலால் அருகருகே அடக்கம்பண்ணப்பட்ட சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில், மாயா (23), எலைரன் (24) என்னும் ஜோடி, நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்காக திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர்.
அந்த தாக்குதலில் மாயா, எலைரன் ஜோடி கொல்லப்பட்டதாகவும், சேர்ந்து வாழ்வோம் என நம்பியிருந்த அவர்கள், அருகருகே புதைக்கப்பட்ட சோகம் நடந்தேறியுள்ளது என்று, ரொமேனியாவுக்கான முன்னாள் தூதரான David Saranga என்பவர் தெரிவித்துள்ளார்.
எக்ஸில் அவர் மாயா, எலைரன் ஜோடியின் புகைப்படத்துடன் இந்த துயரச் செய்தியை பகிர்ந்துகொண்டுள்ளார்.