sittharethen 1 720x375 1
செய்திகள்இலங்கை

புலிகளை விசாரணைக்கு உட்படுத்துவது போராட்டத்தை இழிவுபடுத்துவதாகும்! – சித்தார்த்தன்

Share

தமிழீழ விடுதலைப் புலிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த போராட்டத்தையும் இழிவுபடுத்தும் செயற்பாடாகும்,

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாகவோ அல்லது கொள்கை ரீதியாகவோ எச் சந்தர்ப்பத்திலும் நாம் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க மாட்டோம். இதில் நாம் மிகத் தெளிவோடு இருக்கிறோம்.

விடுதலைப்புலிகளை விசாரியுங்கள் என்று கூறினாலே அவர்கள் போராடியது பிழை என்பது இவர்களின் நிலைப்பாடு. அது இயக்க போராட்டமல்ல.

ஒரு சில தமிழ் மக்களை தவிர, மிகுதி ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த விடுதலை போராட்டத்தை ஆதரித்தனர், அதில் சிறுசிறு தவறுகள் நடந்திருந்தாலும் அது மக்களின் போராட்டம்.

அத்தோடு கூட்டமைப்பை விட்டு விலகுகிறோம் என நாம் எப்பொழுதும் கூறியதில்லை , . தமிழ் மக்களுடைய பலத்தை உடைக்கும் நிலையை நாம் எடுக்க மாட்டோம்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...