tamilni 95 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்

Share

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்

இஸ்ரேலில் தற்போது தொடர்ந்து வரும் போர் நிலமை காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துள்ளது.

இதனால் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகள் உயர்வடையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிலை காரணமாக எரிபொருளின் விலை உயரத் தொடங்கியுள்ள நிலையில் இது பொருளாதார மந்த நிலையில் நாடுகளை பெரிதும் பாதிக்கும் என தெரிவிக்கப்படடுள்ளது.

இந்த போரில் மத்திய கிழக்கு நாடுகள் இரண்டு பக்கங்களாக பிரிந்து நிற்கின்றன. ஹமாஸ் அமைப்பை எதிர்க்கும் சில நாடுகளும் ஆதரிக்கும் சில நாடுகளும் உள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் பிரதான நாடுகளாக உள்ளன.

இந்தநிலையில், போரின் எதிரொலியால் விரைவாக எரிபொருள் விலைகள் உயர்வடையும் சாத்தியம் அதிகரித்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி கச்சா எண்ணெய் விலையில் 5 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. போர் நீடித்தால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

இந்தநிலையில், நீண்ட நாள் போருக்குத் தாம் தயார் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. அவ்வாறு, போர் தொடருமானால் கச்சா எண்ணெய்யின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்றும், அப்படி மாற்றங்கள் ஏற்படுமிடத்து இலங்கையிலும் எரிபொருள் விலைகளில் அது தாக்கம் செலுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மாத ஆரம்பத்தில் இலங்கையில் எரிபொருள் விலையில் அதிகரிப்புச் செய்யப்பட்ட நிலையில், மற்றுமொரு அதிகரிப்பு ஏற்படுமானால் இது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும் என பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...