rtjy 151 scaled
இலங்கைசெய்திகள்

ஐ.நா பேரவையில் பேசும் வாய்ப்பை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Share

ஐ.நா பேரவையில் பேசும் வாய்ப்பை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அண்மையில் ஜெனீவாவிற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் பேசும் வாய்ப்பை இழந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுவாக ஒரு பிரச்சினையை எழுப்ப விரும்பும் ஒருவருக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வுகளில் பேசுவதற்கு ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும்.

இதன் அடிப்படையில் தமது சகாவான ஹெக்டர் அப்புஹாமிக்கு அமர்வுகளில் 45 வது இடம் வழங்கப்பட்டது. ஆனால் நாள் முடிவில் அவர் அமர்வுகளில் பேச நேரம் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் குறித்த விவகாரத்தை விரைவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு எடுத்து செல்லவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்புஹாமி, உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் பற்றிய பிரச்சினையை எழுப்ப இருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தாங்கள் தங்கள், சொந்த பணத்தை சுற்றுப்பயணத்திற்காக செலவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...