rtjy 147 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த தம்பதியினர்

Share

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த தம்பதியினர்

ருமேனியா நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி புத்தளம் மாவட்டம் முழுவதும் சுமார் 300 இலட்சம் ரூபாவை ஏமாற்றிய நுரைச்சோலை மற்றும் மாதம்பையில் வசிக்கும் தம்பதியினர் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடுவளை, ஹலவத்தல, மாதம்பே, வென்னப்புவ, கட்டுனேரிய, மாரவில, மாதம்பே, கருக்குவ ஆகிய பிரதேசங்களில் தாம் வாழ்ந்த வாடகை வீட்டில் இருந்து 25 நபர்களிடத்தில் இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை இலங்கை முழுவதிலும் உள்ள 16 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், குறித்த தம்பதியினரை கைது செய்யமுடியவில்லை என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இந்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட ரசீதுகள் மற்றும் காசோலைகளின் நகல்கள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுமேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...