rtjy 139 scaled
இலங்கைசெய்திகள்

கொலை முயற்சி: துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள்

Share

கொலை முயற்சி: துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள்

வர்த்தகர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவ வீரர்கள் இருவர் எல்பிட்டியவில் வைத்து துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ சிப்பாய்கள் என சந்தேகிக்கப்படும் இருவரும் பாதாள உலக தலைவர் ரத்கம விதுரவின் உதவியாளர்கள் என தற்போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதற்கமைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த வர்த்தகரை கொலை செய்வதற்காக அவரது வர்த்தக இடத்திற்கு அருகில் வந்திருந்த போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இராணுவ வீரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரும் விடுமுறைக்காக தமது ஊர்களுக்கு சென்று கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரான குறித்த வர்த்தகரை கொலை செய்யும் நோக்கில் அங்கு சென்றுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
1733038624 vehicle import
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதிகள் 2026 இல் இயல்பு நிலைக்குத் திரும்பும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும் என்று மத்திய வங்கியின்...

25 6787f6ba5e006
செய்திகள்உலகம்

AI சகாப்தத்தில் தொடரும் பணிநீக்கங்கள்: மெட்டா நிறுவனத்தில் 600 ஊழியர்களுக்குப் பணி நீக்கம்!

இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் நன்மை ஏற்பட்டாலும், பெரும்பாலும் தீங்காகவே அமைகிறது. அந்த வகையில்,...

gold01
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்: ஒரே வாரத்தில் ரூ. 77,000 குறைவு!

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது....

10745 24 10 2025 10 3 0 5 IMG 20251024 WA0029
செய்திகள்இலங்கை

ஆந்திராவில் ஆம்னி பேருந்தில் பயங்கர தீ விபத்து: 25 பயணிகள் உடல் கருகி பலி!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 24) அதிகாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஆம்னி...