rtjy 128 scaled
இலங்கைசெய்திகள்

சகோதரியின் வீட்டிற்கு சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

Share

சகோதரியின் வீட்டிற்கு சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஊவா பரணகம பிரதேசத்தில் தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் அந்த வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

வெலிமட மிராஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவர் ஊவா பரணகம – பல்லேவெல பிரதேசத்தில் வசிக்கும் தனது மூத்த சகோதரியின் வீட்டிற்குச் சென்ற போதே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

நேற்றிரவு வீட்டின் அறையொன்றில் உறங்கச் சென்றிருந்த நிலையில் இன்று காலை அப்பகுதியினர் நடத்திய விசாரணையில் பெண் வீட்டில் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

ஊவா பரணகம பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து கிடப்பதை பிரதேசவாசிகள் கண்டதாகவும் இது தொடர்பில் ஊவா பரணகம பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான தகவல்களை விசாரித்ததில் அவர் பல்லேவெல பகுதியை சேர்ந்த காணாமல் போன இளம்பெண் என தெரியவந்துள்ளது.

இளம் பெண் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​​​அவரது கீழ் உடல் நிர்வாணமாக இருந்தது மற்றும் அவர் அரை மயக்கத்தில் இருந்தார், பின்னர் அவர் தனக்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை என்று கூறினார்.

சம்பவத்தை எதிர்கொண்ட இளம்பெண் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலும், அவர் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஊசி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...