rtjy 97 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

Share

ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

2025 ஆண்டு முதல் கல்விப் பொதுதராதர உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ பரீட்சை திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

மேலும் தெரியவருகையில், இந்த ஆண்டும் பரீட்சைகள் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நடத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகளை நடாத்துவதற்கு பிள்ளைகளுக்கு சுமை ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்துவதற்கு நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கு வழங்கிய பணிப்புரையிலும் காணப்படுகின்றது.

அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ பரீட்சை திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் பரீட்சைகள் பிற்போடப்படுவதனால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில்கள் பெறுவது, வயது வரம்பைத் தாண்டிச் செல்வது போன்ற பல பாதகமான விளைவுகளை மாணவர்கள் சந்திக்க நேரிடும் என அண்மையில் கல்வி நிபுணர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...