rtjy 80 scaled
இலங்கைசெய்திகள்

சிகப்பு சீனி தொடர்பில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

Share

சிகப்பு சீனி தொடர்பில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் வெள்ளை சீனியை சிகப்பு சீனியாக மாற்றும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெனியாய ஹான்போட் பிரதேசத்தில் நீண்ட காலமாக சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில் வெள்ளை சீனியை சிகப்பு சீனியாக மாற்றும் தொழிற்சாலையொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலையில் இருந்து 2000 கிலோ கிராம் நிறையுடைய சீனி மீட்கப்பட்டுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திர சாதனங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதற்கமைய சீனியில் கலப்படம் செய்வதற்காக சீமெந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சுற்றிவளைப்பின்போது சீமெந்து கலவை, தராசு, எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
11 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒரு அடையாள அட்டைக்கு ஒரு QR மாத்திரமே: டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் புதிய கட்டுப்பாடு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ள எரிபொருள் QR முறைமையின் கீழ், ஒரு தேசிய அடையாள...

10 16
செய்திகள்அரசியல்இலங்கை

அரச அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்துப் புதிய சுற்றுநிருபம்: புதன்கிழமை விடுமுறை நடைமுறைகள் அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்கில் அரச அலுவலகங்களை முன்னெடுத்துச்...

09 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எதிர்காலத்தில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி எச்சரிக்கை

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், தற்போது மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், வரும் காலங்களில்...

08 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் எரிபொருள் கையிருப்பு விபரம்: வலுசக்தி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரை!

சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர்...