rtjy 51 scaled
இலங்கைசெய்திகள்

ரவிராஜை கொலை செய்தவர் யார்..! அசாத் மௌலானாவின் ஆதாரங்கள்

Share

ரவிராஜை கொலை செய்தவர் யார்..! அசாத் மௌலானாவின் ஆதாரங்கள்

ரவிராஜ் படுகொலை தொடர்பில் அசாத் மௌலானா கூறிய தகவல்கள் பல என்னை வந்து சேர்ந்திருக்கின்றன. அவை அதிகாரபூர்வமாக விரைவில் வெளிவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ரவிராஜை படுகொலை செய்தவர் யார், படுகொலை செய்வதற்கு உத்தரவிட்டவர் யார், முதல் உத்தரவு யாரிடம் இருந்து வந்தது, இறுதி உத்தரவு யாரிடம் இருந்து வந்தது என்றெல்லாம் அசாத் மௌலான பல தகவல்களை வெளியிட்டிருக்கின்றார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

திரிபோலி என்று சொல்லப்படும் அந்த கொலைக் குழு முதலில் கொலை செய்ய முயற்சி செய்தது என்னை. என் பெயரும் சொல்லப்பட்டது. ஆனால் அது சாத்தியமாகவில்லை என்றும் சொல்லப்பட்டது.

எல்லா பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், எல்லா பொலிஸாரும், இராணுவத்தினரும் மோசமானவர்கள் அல்லர். ரவிராஜ் படுகொலை செய்யப்படும் போது அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் கொல்லப்பட்டாரே.

இந்த அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக, அரசியல் தேவைக்காக சில குழுக்களை வைத்திருக்கின்றார்கள். இது சாதாரண பொலிஸாருக்கு தெரியாது.

எனக்கு இருந்த ஆபத்து தொடர்பில் நல்லெண்ணம் கொண்ட பொலிஸார் எனக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர்.

நானும், ரவிராஜூம் கலந்து கொள்ளவிருந்த களுத்துறை கூட்டத்தில், அந்த மேடைக்குப் பின்னால் இருந்து கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 170
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னோக்கிச் செல்வோம்: நாமல் ராஜபக்ச அழைப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்காலை, கால்டன் ஹவுஸில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்ற...

world 169
செய்திகள்இலங்கைபிராந்தியம்

57.5 கிலோ இறந்த கோழி இறைச்சி மீட்பு – வர்த்தகருக்கு எதிராக வழக்கு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட...

world 168
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் இறக்குமதியாளர்களுக்கு வரிப்பணம் மீளளிப்பு: புதிய நடைமுறை திங்கட்கிழமை ஆரம்பம்!

அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வசூலிக்கப்பட்ட...

world 167
செய்திகள்உலகம்

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்கள்!

ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ‘அதிகபட்ச அழுத்தம்’ கொடுக்கும் கொள்கையினால், அமெரிக்க ஜனாதிபதி...