tamilnig scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

Share

நாடாளுமன்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

நாடாளுமன்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் சிறப்புரிமை கேள்வி ஒன்றை எழுப்பியதன் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற விவாதம் நடைபெற்ற போது ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தம்மை “பெண் நாய்” என இழிவு படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெண்களை இழிவு படுத்துவதற்கு இடமளிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதனை தாம் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் மிக மோசமாக இழிவுபடுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறு பெண்கள் இழிவுபடுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மை தரக்குறைவாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியுள்ளார்.

மேலும் தம்மை அல்லது பெண்களை இழிவுபடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் வைத்து கன்னத்தில் அறைவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...