tamilnig scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

Share

நாடாளுமன்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

நாடாளுமன்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் சிறப்புரிமை கேள்வி ஒன்றை எழுப்பியதன் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற விவாதம் நடைபெற்ற போது ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தம்மை “பெண் நாய்” என இழிவு படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெண்களை இழிவு படுத்துவதற்கு இடமளிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதனை தாம் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் மிக மோசமாக இழிவுபடுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறு பெண்கள் இழிவுபடுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மை தரக்குறைவாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியுள்ளார்.

மேலும் தம்மை அல்லது பெண்களை இழிவுபடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் வைத்து கன்னத்தில் அறைவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...