tamilnig scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

Share

நாடாளுமன்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

நாடாளுமன்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் சிறப்புரிமை கேள்வி ஒன்றை எழுப்பியதன் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற விவாதம் நடைபெற்ற போது ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தம்மை “பெண் நாய்” என இழிவு படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெண்களை இழிவு படுத்துவதற்கு இடமளிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதனை தாம் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் மிக மோசமாக இழிவுபடுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறு பெண்கள் இழிவுபடுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மை தரக்குறைவாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியுள்ளார்.

மேலும் தம்மை அல்லது பெண்களை இழிவுபடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் வைத்து கன்னத்தில் அறைவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...