rtjy 8 scaled
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் முறைகள் மூலம் கடன் பெறுவோருக்கு எச்சரிக்கை

Share

ஒன்லைன் முறைகள் மூலம் கடன் பெறுவோருக்கு எச்சரிக்கை

இலங்கையில் சமூக ஊடகங்கள் மற்றும் ஒன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு பணம் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் எந்தவித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்லைன் நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஒன்லைன் முறைகள் மூலம் உடனடி கடன் வழங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிறுவனங்களில் உடனடி கடன் பெற்ற சிலர் தாம் எதிர்கொண்ட அசௌகரியங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான முறையில் பணம் பெற்றவர்கள் நாளாந்தம் வட்டி செலுத்த முடியாத உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்களும் பதிவாகி உள்ளன.

இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையவழி முறைகள் மூலம் கடன் பெற்று அசௌகரியங்களுக்கு உள்ளானவர்கள் ஒன்றிணைந்து இணைய நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் வகையில் நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
07 8
உலகம்செய்திகள்

ஈரான் போருக்கு பிரிட்டனின் உதவி தேவையில்லை: பிரதமர் கீர் ஸ்டார்மரை விமர்சித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரில், பிரிட்டனின் ஆதரவு...

06 7
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அவசரக்கால ஆயுத விற்பனை: அமெரிக்க காங்கிரஸ் அனுமதியைத் தவிர்த்த ட்ரம்ப் நிர்வாகம்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு சுமார்...

05 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் இடமாற்றம்: பதற்றமான சூழலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஒன்பது கைதிகள் அங்கிருந்த அங்கிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாத்தறை சிறைச்சாலையினுள்...

04 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலை துஷ்பிரயோகச் சம்பவம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்திற்கு தடை!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...