1 19 1 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்திக்குத்து! அதிரடி கைது

Share

பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்திக்குத்து! அதிரடி கைது

பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 டீன் ஏஜ் சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் லூடன்(Luton) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.

3 டீன் ஏஜ் சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்டு இருப்பதாக நேற்று இரவு 7 மணியளவில் Nunnery Lane பகுதிக்கு பெட்ஃபோர்ட்ஷையர் பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.

இந்த வன்முறை சம்பவத்தில் அடையாளம் கண்டறியப்படாத ஒரு சிறுவன் பல கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் கத்திக்குத்துக்கு ஆளான இரண்டு சிறுவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்றொரு சிறுவன் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் 16 வயது டீன் ஏஜ் சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 டீன் ஏஜ் சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தை இரண்டு மைல் தொலைவில் உள்ள சண்டன் பார்க் சாலை மாலை 4 மணிக்கு நடைபெற்ற மற்றொரு கத்திக்குத்து சம்பவத்துடன் பொலிஸார் தொடர்பு படுத்துகின்றனர்.

Share
தொடர்புடையது
pic
உலகம்செய்திகள்

எச்-1பி விசா கட்டண உயர்வு: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு – இந்திய ஊழியர்களுக்கு ஆறுதல்!

அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிய வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி (H-1B) விசா கட்டணத்தை கடந்த மாதம்...

1334083
உலகம்செய்திகள்

சென்னையில் அமோக தீபாவளி விற்பனை: பட்டாசு குப்பைகள் 151 மெட்ரிக் டன் அகற்றப்பட்டன!

தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி...

image 1843c289c1
செய்திகள்இலங்கை

5 வயது சிறுமி சித்திரவதை: தாயின் கள்ளக்காதலன் கொடூரம்! – சந்தேக நபர் தலைமறைவு!

மட்டு. கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த, கணவரைப் பிரிந்து வாழும் 23 வயது பெண்ணின் 5 வயது...

24 671602c72b24d.webp
செய்திகள்இந்தியா

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை 38ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: 68 பேருக்கு அஞ்சலி!

இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில்  சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் 38வது நினைவு தினம் இன்று (அக்...