rtjy 317 scaled
இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடல் போராட்ட காணொளிகளை பகிர்ந்த குற்றச்சாட்டு: பிரித்தானிய பெண் கூறியுள்ள விடயம்

Share

காலிமுகத்திடல் போராட்ட காணொளிகளை பகிர்ந்த குற்றச்சாட்டு: பிரித்தானிய பெண் கூறியுள்ள விடயம்

இலங்கையில் 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது கிளர்ச்சி காணொளிகளை பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய சமூக ஊடகப் பெண், தாம் தொடர்ந்தும் இலங்கையில் தலைமறைவு வாழ்க்கையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இணையம் ஒன்றுக்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

13 மாதங்கள் மறைந்திருந்த நிலையில் தாம் நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

35 வயதான Kayleigh Fraser, இலங்கையில் தங்கியிருந்தபோது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை குடியேற்ற அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது அவர் தவறான விசாவில் நாட்டிற்கு வருகை தந்ததாக கூறி அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றினார்.

Fraser, தனது இன்ஸ்டாகிராமில் காலிமுகத்திடல் போராட்டங்களின் காணொளிகளை பகிரத் தொடங்கிய பின்னரே, அதிகாரிகள் அவரின் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

அத்துடன் அவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இலங்கையின் உயர்நீதிமன்றம், அதிகாரிகள் பிறப்பித்த நாடுகடத்தல் உத்தரவை உறுதி செய்தது.

எனினும் நாட்டின் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய தாம் பயப்படுவதாக Fraser கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரித்தானியாவின் வடகிழக்கு ஃபைஃப் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லெய்ன் நாட்டின் வெளியுறவு அலுவலக அதிகாரிகளை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது Fraser இலங்கை நாட்டை விட்டு வெளியேற உத்தரவாதம் அளிக்கப்படுவார் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழியை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தகைய உத்தரவாதங்கள் வழங்கப்படும், தாம் மறைவிலிருந்து வெளியே வர முடியாது என்று Fraser கூறியுள்ளார். இலங்கையில் தற்போது தாம் வாழும் வாழ்க்கையை வாழ்க்கையாக அங்கீகரிக்கவில்லை.

இங்கே அதிகாரத்தில் இருக்கும் இந்த பைத்தியக்காரர்களின் தயவில் ஒட்டுமொத்த உலகமும் தம்மை கைவிட்டது போல் தாம் உணர்வதாக Fraser தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...