pracnet
உலகம்செய்திகள்

மகப்பேற்று விடுப்பு ஓராண்டாக அறிவிப்பு!

Share

மகப்பேற்று விடுப்பு ஓராண்டாக அறிவிப்பு!

அரச பெண் ஊழியர்களுக்கான மகப்பேற்று விடுமுறையை 12 மாதங்களாக உயர்த்தி தமிழக உயர்நீதிமன்றம் அரசாணை பிறப்பிப்பித்துள்ளது தமிழக அரசு.

தமிழக அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேற்று விடுப்பு வழங்கப்படுகிறது.

அவர்களுக்கான மகப்பேற்று விடுமுறை 9 மாதங்களில் இருந்து தற்போது 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக அதாவது 270 நாள்களாக உயர்த்தப்பட்டது.

மேலும் தற்போது இந்த விடுப்பு பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக்கொள்ளவும், விடுப்பு காலத்துக்கு முழு சம்பளம் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் 12 மாதங்களாக உயர்த்தப்படுகிறது எனவும் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பில் இருந்தால் 365 நாள்கள் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...