tamilni 372 scaled
இலங்கைசெய்திகள்

ரூபாவின் தற்போதைய பெறுமதி தொடர்பில் வெளிவிவகார அமைச்சரின் தகவல்

Share

ரூபாவின் தற்போதைய பெறுமதி தொடர்பில் வெளிவிவகார அமைச்சரின் தகவல்

கடந்த ஆண்டை விட இலங்கை ரூபாவின் பெறுமதி தற்போது நிலையானதாக மாறியுள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் இந்தியாவின் உதவி குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், கடந்த ஆண்டை விட நாட்டின் நிலைமை மிகவும் சிறப்பாக உள்ளது என்று அலி சப்ரி தெரிவித்தார்.

பணவீக்கம் குறைந்துள்ளது, ரூபாவின் பெறுமதி நிலையானதாக மாறியுள்ளது, கையிருப்பு உயர்ந்துள்ளது, சுற்றுலா துறை வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்தியா 3.9 பில்லியன் மதிப்பிலான பல்வேறு உதவிகளை எங்களுக்கு வழங்கியுள்ளது. நாடு என்ற ரீதியில் இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இன்று நாம் அடைந்துள்ள நன்மதிப்பில் பெரும் பகுதியை இந்தியாவுக்கு சாரும் என அமைச்சர் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...