rtjy 212 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

சாணக்கியனை உருவக்கேலி செய்த பிள்ளையான்!

Share

சாணக்கியனை உருவக்கேலி செய்த பிள்ளையான்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியனை நோக்கி கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளின் பிரகாரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த இரா சாணக்கியன், திரிப்பொலி பிளட்டூன் இராணுவப்படைபிரிவிற்கும் பிள்ளையானுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் பிள்ளையான் ஒரு கொலையாளி எனவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட பிள்ளையான் சாணக்கியனை நோக்கி, ”பைத்தியக்காரன்” என்றும் ”பைத்தியக்காரனுக்கு நேரம் கொடுத்தால் இவ்வாறு தான் பேசுவான்” எனவும் ”போடா” என்றும் கடுமையான வார்த்தைகளை கொண்டு உருவக்கேலி செய்தும் விமர்சித்துள்ளார்.

குறிப்பாக சர்வதேச தரப்பிலும், இலங்கையின் சட்டமூலங்களிலும் ஒரு தனி நபரை விமர்சிப்பது பொதுத்தன்மையின் அடிப்படையில் நிறுத்தப்பட்ட ஒன்றாக காணப்படுகிறது.

எனினும் நேற்றைய தினம் சாணக்கியன் தொடர்பில் பிள்ளையான் தெரிவித்த விடயங்களானது பொதுமக்கள் தரப்பில் விமர்சனத்தத்துக்கு உள்ளாகி வருகிறது.

எனினும் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் தெரிவித்த கருத்துக்களை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் தரப்பு உறுப்பினர்களோ, அல்லது எதிர் தரப்பு உறுப்பினர்களோ நிலையியற் கட்டளை சட்டத்தின் அடிப்படையில் நீக்குவதற்கான வலியுறுத்தலை முன்வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நிலையியற் கட்டளை விடயத்தை முன்வைக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடானது அனைவரையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

எனினும் பிள்ளையான் தெரிவித்த விடயமானது தற்போது வரை நாடாளுமன்றின் ஹன்சாட் அறிக்கையில் இருந்து நீக்கப்படாமல் ஆவணப்படுத்தப்பட்டு காணப்படுகிறது.

பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

குறிப்பாக வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர் பாரம்பரியங்களையும் கலாசாரங்களையும் உள்ளடக்கியவர்களாக காணப்படுகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் பிள்ளையானினுடைய இந்த கருத்தானது கிழக்கு மாகாணங்களை சார்ந்த புத்திஜீவிகளையும், கல்வியியலாளர்களையும் வாக்களித்த மக்களையும் பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழர்களின் பண்பாடுகளின் அடிப்படையில் தனி ஒருவரை ஒரு போதும் உருவக்கேலி செய்யாத சூழ்நிலையில், பிள்ளையானின் இந்த செயற்பாடானது பலத்த விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மற்றும் புத்திஜீவிகளையும் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது, மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரின் இச் செயற்பாடானது மட்டக்களப்பு மண்ணிற்கு பெரும் இழுக்கு என மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் கடந்த மாதம் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலும் நாடாளுமனற உறுப்பினர் பிள்ளையான் ஊடகவியலாளர்களை விமர்சித்தமையும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை நோக்கி ”போடா” என்ற வார்த்தையை உபயோகித்தமையும் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...

Untitled 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோட்மலையில் வேன் 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்!

நுவரெலியா – கம்பொலை பிரதான வீதியில் கோட்மலை, கெராண்டி எல்லா பகுதிக்கு அருகே இன்று (ஏப்ரல்...