tamilni 300 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென நீக்கப்பட்ட கட்டுப்பாடு

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென நீக்கப்பட்ட கட்டுப்பாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் குற்றவாளிகளை சிக்க வைப்பதற்காக பாதுகாப்பு பிரதானிகளால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயர் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர்கள், புலனாய்வுத் தலைவர்கள், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் விமான நிலையத் தலைவர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

அங்கு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குற்றவாளிகள் மற்றும் ஆட்கடத்தல்காரர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு கவுண்டர் ஊடாக எவ்வாறு பதுங்கிச் செல்கின்றனர் என்பதை புலனாய்வு பிரிவின் தலைவர்கள் விபரித்துள்ளனர்.

இந்த தகவல்களை சுட்டிக்காட்டிய பின்னர், குடிவரவு கவுன்டர்களுக்கு மக்கள் வரும் வரிசைக்கு ஏற்ப கவுன்டர்களை சரிபார்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்காக, குடிவரவுத் திணைக்களத்தின் வழிகாட்டி அதிகாரி ஒருவரை முன்னால் நிறுத்தி, வரிசையாக கவுன்டர்களுக்கு மக்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் இந்த சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

செயற்பாடு தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, மேலிடத்திலிருந்து வந்த உத்தரவிற்கமைய அதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு கவுன்டரில் பயணிகளை அவர்கள் விரும்பியவாறு செல்ல அனுமதிப்பதால், கடத்தல்காரர்களுடன் நட்புறவு கொண்ட அதிகாரிகள் இருக்கும் போது, ​​கடத்தல்காரர்கள் அந்த கவுன்டர்களை தெரிவு செய்து நாட்டிற்குள் பிரவேசிப்பதும் இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

அண்மையில் பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ குடிவரவு குடியகல்வு அதிகாரி ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிடிபட்டதாக பொலிஸ் மா அதிபர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...