tamilni 281 scaled
இலங்கைசெய்திகள்

அவிசாவளையில் துப்பாக்கி சூடு : இருவர் பலி

Share

அவிசாவளையில் துப்பாக்கி சூடு : இருவர் பலி

கேகாலை அவிசாவளை வீதியில் அவிசாவளை மேல் தல்துவ மர வேலைப்பாடு பட்டறைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு 11.15 அளவில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழுவினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் அவிசா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், உயிரிழந்தவர்கள் அவிசாவளை தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 27 வயதுடையவர்களாவர்.
மேலும், அதே முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்து அவிசாவளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்அவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

காயமடைந்த இருவரும் அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 43 மற்றும் 42 வயதுடையவர்கள்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர்கள் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....