tamilni 272 scaled
உலகம்செய்திகள்

பரபரப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம்

Share

பரபரப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம்

டுபாய் சர்வதேச விமான நிலையமானது ஆசிய – பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகவும் பரபரப்பான மற்றும் சிறந்த சேவையை வழங்கும் விமான நிலையமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலைய கவுன்சில் ஆசியா – பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, டுபாய் விமான நிலையம் பிராந்தியத்தில் உள்ள மற்றைய விமான நிலையங்களை விடவும் சிறந்த சேவையை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, டுபாய் விமான நிலையமானது இவ்வாண்டின் முதல் பாதியில் 41.6 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

இது கடந்த 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை விட சற்று அதிகமாகும் எனவும், டுபாய் விமான நிலையம் இவ்வாண்டின் முதல் பாதியில் மொத்தம் 201,800 விமானங்களைக் கையாண்டள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கடந்த 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 13 வீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாய் விமான நிலையமானது 104 நாடுகளில் 255 க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் 90 க்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 186
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எஹெலியகொடவில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி 10 பேர் படுகாயம்!

எஹெலியகொட நகரில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து...

world 185
உலகம்செய்திகள்

போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தீவிர முயற்சி: தெஹ்ரான் மற்றும் ஜித்தாவிற்கு தூதுக்குழுக்கள் விரைவு!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்களைத் தணித்து, நிரந்தர அமைதி உடன்படிக்கையை எட்டும் நோக்கில்...

world 184
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைப்பு: மின்சார உற்பத்தி முடிவால் குடிநீர் விநியோகம் பாதிப்பு!

மின்சார உற்பத்திக்காக விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து வழக்கத்திற்கு மாறான முறையில் தண்ணீரை வெளியேற்ற அரசாங்கம் எடுத்துள்ள முடிவினால்,...

world 183
செய்திகள்உலகம்

ஈரான் – அமெரிக்கா இடையே தொடரும் ரகசிய செய்திப் பரிமாற்றம்: பாகிஸ்தான் தூதுக்குழு இன்று தெஹ்ரான் வருகை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றித் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும்...