tamilni 234 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 வில் சம்பந்தப்பட்டவர்கள் ஆட்கடத்தலுடன் தொடர்பு

Share

சனல் 4 வில் சம்பந்தப்பட்டவர்கள் ஆட்கடத்தலுடன் தொடர்பு

மட்டக்களப்பு மாவட்ட வழிந்துக்காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் கால்நடைப் பண்ணையாளர்களால் 5ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டம் மனித சங்கிலிப்போராட்டமாக இன்று (19.09.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது எங்களினுடைய உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான முக்கிய காரணம் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒட்டுக்குழுக்களே என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளதோடு அரசாங்கத்தோடு இணைந்தே இந்த ஒட்டுக்குழுக்கள் இந்த செயலை செய்து இருக்கின்றனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்

அத்தோடு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் அரசாங்கம் இது வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த விடயம் தொடர்பில் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் வகையிலே ஆர்ப்பாட்டமானது 5ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கம், முன்னால் மாகாணசபை முதல்வர் பி. சரவணபவன், பட்டிப்பளைப் பிரதேச கால்நடை வளர்ப்பாளர் சங்கம் மற்றும் பெருந்திரளான மக்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...