tamilni 197 scaled
இலங்கைசெய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு பதில் கூற மறுத்த பிள்ளையான்

Share

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்கூற மறுப்பு தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களை பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பார்வையிட வருகை தந்துள்ளார்.

இதன்போது தனது விஜயம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்கூற சிவனேசத்துரை சந்திரகாந்தன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர், ஊடகங்கள் அங்கேயும், இங்கேயும் சிறுசிறு துண்டுகளாக எடுத்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டு வருகின்றது. தான் பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய விடயங்களை ஊடகங்களில் பிரசுரிக்க முடியும், ஆனால் உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பண்ணையாளர்களுக்கு மத்தியில் ஊடகங்களையும்,ஊடகவியலாளர்களையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளதாகவும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...