tamilni 197 scaled
இலங்கைசெய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு பதில் கூற மறுத்த பிள்ளையான்

Share

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்கூற மறுப்பு தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களை பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பார்வையிட வருகை தந்துள்ளார்.

இதன்போது தனது விஜயம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்கூற சிவனேசத்துரை சந்திரகாந்தன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர், ஊடகங்கள் அங்கேயும், இங்கேயும் சிறுசிறு துண்டுகளாக எடுத்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டு வருகின்றது. தான் பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய விடயங்களை ஊடகங்களில் பிரசுரிக்க முடியும், ஆனால் உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பண்ணையாளர்களுக்கு மத்தியில் ஊடகங்களையும்,ஊடகவியலாளர்களையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளதாகவும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...