tamilni 185 scaled
இலங்கைசெய்திகள்

நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம்

Share

நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம்

சதொச நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கட்டாய பணி நீக்கம் செய்ய அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாக சதொச பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி சதொசவில் பணியாற்றிய 292 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ள நிலையில், குறித்த முடிவுக்கு ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிய வருகையில், சதொச மறுசீரமைப்பின் கீழ் இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் 300 ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுப்பதற்கு சதொச பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அமைச்சரவையில் சமர்ப்பித்த பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதால் சதொச நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த கட்டாய ஓய்வு பிரேரணையின் பிரகாரம் ஊழியர்களுக்கு செப்டெம்பர் மாதம் சம்பளம் வழங்கியதன் பின்னர், எதிர்வரும் 30ஆம் திகதி முதல் மாதாந்த சம்பளம் அல்லது வேறு கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சதொச ஊழியர்கள் அடுத்த வாரம் முதல் தொழில் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...