tamilni 185 scaled
இலங்கைசெய்திகள்

நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம்

Share

நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம்

சதொச நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கட்டாய பணி நீக்கம் செய்ய அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாக சதொச பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி சதொசவில் பணியாற்றிய 292 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ள நிலையில், குறித்த முடிவுக்கு ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிய வருகையில், சதொச மறுசீரமைப்பின் கீழ் இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் 300 ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுப்பதற்கு சதொச பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அமைச்சரவையில் சமர்ப்பித்த பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதால் சதொச நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த கட்டாய ஓய்வு பிரேரணையின் பிரகாரம் ஊழியர்களுக்கு செப்டெம்பர் மாதம் சம்பளம் வழங்கியதன் பின்னர், எதிர்வரும் 30ஆம் திகதி முதல் மாதாந்த சம்பளம் அல்லது வேறு கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சதொச ஊழியர்கள் அடுத்த வாரம் முதல் தொழில் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...