tamilni 184 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு

Share

நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு

இலஞ்சம் மற்றும் ஊழல் என்பது இப்போது நாட்டில் குற்றவியல் வருமானத்தை உருவாக்கும் இரண்டாவது மிக முக்கியமான சட்டவிரோத நடவடிக்கையாக மாறியுள்ளது.

இந்த செயற்பாடு, 2014 இல் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது மூன்று இடங்களால் முன்னோக்கி வந்துள்ளதாக மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட தேசிய பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அபாய மதிப்பீட்டு அறிக்கையில் நிதிப் புலனாய்வுப் பிரிவு இதனை வெளிப்படுத்தியுள்ளது.

அதிகமான சம்பவங்கள் முறைப்பாடுகளாக பதிவாகியிருந்தாலும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் விசாரணைகள் மூலம் குறைவான எண்ணிக்கையிலான வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குற்றவியல் வருமானத்தை உருவாக்கும் முதல் சட்டவிரோத செயற்பாடுகளாக போதைப்பொருள் மற்றும் சுங்கம் தொடர்பான குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...