tamilni 156 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 8 மாதங்களில் 1613 பேர் விபத்தில் பலி

Share

இலங்கையில் 8 மாதங்களில் 1613 பேர் விபத்தில் பலி

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் எட்டுமாத காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 1427 விபத்துக்கள் மூலம் 1613 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் போக்குவரத்து நிர்வாக பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இவற்றில் 632 மோட்டார் சைக்கிள் விபத்துக்களாகும். கடந்த வருடத்தில் இரண்டாயிரத்து 418 விபத்துக்கள் மூலம் 2538 பேர் உயிரிழந்திருப்பதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் 1009 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு 171 பாடசாலை மாணவர்கள் விபத்துக்குள்ளாகி உள்ளனர்.

இவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். 28 பிள்ளைகள் படுகாயம் அடைந்தனர். 15 பேர் நீண்டகால உபாதைக்கு உள்ளானதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடத்தில் பாதுகாப்பான தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 684 பேர் சட்டத்தின் பிடியில் சிக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...