rtjy 113 scaled
இலங்கைசெய்திகள்

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினரை நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில் கொழும்பு நிப்பான் ஹோட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டை ஞானசார தேரர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜாதிக்க பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்க விஜித்த தேரரினால் இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஊடக சந்திப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து இடையூறு விளைவித்தனர் என ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஞானசார தேரர் மற்றும் அவருடன் ஊடக சந்திப்பிற்குள் பிரவேசித்த தரப்பினரை நீதிமன்றம் 3 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

முறைப்பாடு செய்த தரப்பினருக்கு இந்த நட்டஈட்டை வழங்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறான குற்றச்செயல்களை மீண்டும் இழைக்கக்கூடாது என நீதவான் அறிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கில் சுமத்தப்பட்டிருந்த மற்றுமொரு குற்றச்சாட்டு தொடர்பில் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 68fb42eb327aa
செய்திகள்இலங்கை

பாடசாலை நேர நீட்டிப்புக்கு எதிர்ப்பு: ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்ட எச்சரிக்கை!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால்...

379161 crime 02 1
செய்திகள்இலங்கை

வாள்வெட்டு, போதைப்பொருள் கடத்தல்: சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு!

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்த எட்டுப் பேருக்கு...

Kajen
செய்திகள்இலங்கை

“வடக்கு-கிழக்கில் போதைப்பொருள் பரவலுக்கு இராணுவமே காரணம்”: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போதைப்பொருளைப் பரப்புவதில் இராணுவத்தினருக்குப் பெரும் பங்கு உள்ளது எனத் தமிழ்த்...

25 68fb1c1d6b80d
செய்திகள்இலங்கை

லசந்த விக்ரமசேகர மரணம்: தலையில் மற்றும் மார்பில் பலத்த காயம் – சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு உறுதி!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் மரணத்திற்கான காரணம், துப்பாக்கிச் சூட்டினால் தலை மற்றும்...