23 64fd4b277a8b2 md
உலகம்செய்திகள்

தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த பிரித்தானிய பொலிஸார்

Share

தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த பிரித்தானிய பொலிஸார்

லண்டன் சிறையில் இருந்து தப்பித்த கைதியை பிரித்தானிய பொலிஸார் சனிக்கிழமை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய நபர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட டேனியல் காலிஃபைக் லண்டன் சிறையில் இருந்து இந்த வாரத்தின் ஆரம்பத்தில் தப்பிச் சென்றதாக அறிவிக்கப்பட்டார்.

அத்துடன் அவர் நாட்டை விட்டு வெளியேறி தப்பிச் ஓடலாம் என்ற கணிப்பில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நாடு தழுவிய தேடுதல் வேட்டை நடைபெற்றது.

பிரித்தானியாவின் ராயல் விமானப்படை தளத்தின் அருகே நடைபெற்ற இரண்டு சம்பவங்களின் தொடர்பில் டேனியல் காலிஃபைக் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் லண்டன் சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதி டேனியல் காலிஃபைக்-ஐ  சனிக்கிழமையான நேற்று காலை 11 மணியளவில் சிஸ்விக் பகுதியில் வைத்து பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பயங்கரவாத சந்தேக நபராக மாறிய ராணுவ வீரர்! லண்டன் சிறையிலிருந்து தப்பிய 75 மணிநேரத்திற்குள் சிக்கினார்
பயங்கரவாத சந்தேக நபராக மாறிய ராணுவ வீரர்! லண்டன் சிறையிலிருந்து தப்பிய 75 மணிநேரத்திற்குள் சிக்கினார்
டேனியல் காலிஃபைக் தப்பிச் சென்ற போது சிறைச்சாலையின் சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருந்தார் என்றும், உணவு டெலிவரி வேனின் அடிப்பகுதியில் தொற்றிக் கொண்டு அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என்று தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் டேனியல் காலிஃபைக் தொடர்பான வழக்கு வூல்விச் கிரவுன் நீதிமன்றத்தில் நவம்பர் 13ம் திகதி தொடங்கும் எனவும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 6930ccccd21a5
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இளைஞர் படுகொலை: கைதான 6 பேரின் விளக்கமறியல் டிசம்பர் 15 வரை நீடிப்பு!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 6
இலங்கைசெய்திகள்

இன்று டிசம்பர் 4 வானிலை முன்னறிவிப்பு: மேல் மற்றும் சப்ரகமுவாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

இன்று டிசம்பர் 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பல...

593805334 1428934088793122 3948868341512753198 n
இலங்கைசெய்திகள்

இந்திய நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்தடைந்த விமானம் : வீதிப் புனரமைப்புக்கு 50 டன் இரும்புப் பாலங்கள்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்களின் நிவாரணப் பணிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், இந்தியாவின் மனிதாபிமான உதவிகளுடனான...

676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...