tamilni 139 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவும் புதிய திட்டம்

Share

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவும் புதிய திட்டம்

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ காப்புறுதியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

ஜோசப் பிரேசர் வைத்தியசாலையின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு நோயாளர்களை மருத்துவ தேவைக்காக இலங்கைக்கு வரவழைப்பதற்கு, மருத்துவ சுற்றுலாத்துறை மற்றும் சுகாதார சேவைகள் என்பன உயர்தரத்தில் காணப்பட வேண்டும்.

எமது சுகாதார கொள்கை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும். இந்த நாட்டில் வைத்தியசாலை கட்டமைப்பு, அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் என பிளவுபட்டு காணப்படுகின்றன. பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கிறார்கள்.

எனவே, அதிகளவில் வைத்தியர்களை உருவாக்குவதற்கும் வைத்திய பீடங்களையும் பல்கலைக்கழகங்களையும் ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கமைய முதலாவது அரச சார்பற்ற வைத்திய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் இன்மையால், பிரித்தானியா தமது வைத்தியசாலைகளை நடத்திச் செல்வதில் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

அதனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுடன் இணைந்து, இலங்கையும் பிரித்தானியாவின் வைத்தியசாலை கட்டமைப்பை நடத்திச் செல்கிறது.

அதன்படி, உதவி பெறும் நாடாக மட்டுமன்றி, உதவி வழங்கும் நாடாகவும் இலங்கை மாற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...