ஹனா சிங்கர் ஹம்டி
இலங்கைசெய்திகள்

கைதிகள் கொலை மிரட்டல் – ஐ.நா. கடும் கண்டனம்

Share

கைதிகள் கொலை மிரட்டல் – ஐ.நா. கடும் கண்டனம்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தொடர்பில் கைதிகளை தவறாக நடத்துவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் ஐ.நா. வதிவிட ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி தனது ருவிற்றர் பதிவில்,

கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை. இந்த சம்பவத்தால் இதனை இலங்கை அரசு தவறிவிட்டது. சிறையில் உள்ள அனைவரின் உரிமைகளையும் நிலைநாட்ட வேண்டும். கைதிகளை தவறாக நடத்துவதை கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹாத் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்வேன் என மிரட்டியுள்ளார். அத்துடன் சிறைக்கைதிகள் இரண்டு பேரை மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு இராஜாங்க அமைச்சரை பதவி நீக்கம் செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ஆகியோர் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் லொஹாத் ரத்வத்த தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...