4 20 scaled
இலங்கைசெய்திகள்

அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய குழந்தை

Share

அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய குழந்தை

சீனாவில் 5 மாடி கட்டிடத்தின் ஜன்னல் கம்பியில் சிக்கி கொண்ட குழந்தையை சில இளைஞர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றியுள்ளனர்.

சீனாவின் சோங்கிங் பகுதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் உள்ள வீடு ஒன்றின் ஜன்னலில் குழந்தை ஒன்று சிக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டின் இரும்பு ஜன்னல் பகுதியில் நுழைந்த அந்த குழந்தை தவறி விழுந்த நிலையில், தலை மட்டும் இரும்பு ஜன்னலில் சிக்கி கொண்டு அந்தரத்தில் ஆபத்தான முறையில் தொங்கியது.

தடுப்பாக வைக்கப்பட்டு இருந்த குழந்தை கம்பிகளுக்குள் சிக்கி உயிருக்காக போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து குழந்தை ஆபத்தில் சிக்கி இருப்பதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக குழந்தை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மழையை பொருட்படுத்தாமல் தங்களை உயிரையும் பொருட்படுத்தாமல் அடுக்குமாடி கட்டிடத்தின் பக்க சுவர்களை மிதித்து லாவகமாக ஏறி இரும்பு கம்பியில் சிக்கி தொங்கிய குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

அத்துடன் பரிசோதனைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...