இலங்கைசெய்திகள்

அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய குழந்தை

4 20 scaled
Share

அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய குழந்தை

சீனாவில் 5 மாடி கட்டிடத்தின் ஜன்னல் கம்பியில் சிக்கி கொண்ட குழந்தையை சில இளைஞர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றியுள்ளனர்.

சீனாவின் சோங்கிங் பகுதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் உள்ள வீடு ஒன்றின் ஜன்னலில் குழந்தை ஒன்று சிக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டின் இரும்பு ஜன்னல் பகுதியில் நுழைந்த அந்த குழந்தை தவறி விழுந்த நிலையில், தலை மட்டும் இரும்பு ஜன்னலில் சிக்கி கொண்டு அந்தரத்தில் ஆபத்தான முறையில் தொங்கியது.

தடுப்பாக வைக்கப்பட்டு இருந்த குழந்தை கம்பிகளுக்குள் சிக்கி உயிருக்காக போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து குழந்தை ஆபத்தில் சிக்கி இருப்பதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக குழந்தை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மழையை பொருட்படுத்தாமல் தங்களை உயிரையும் பொருட்படுத்தாமல் அடுக்குமாடி கட்டிடத்தின் பக்க சுவர்களை மிதித்து லாவகமாக ஏறி இரும்பு கம்பியில் சிக்கி தொங்கிய குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

அத்துடன் பரிசோதனைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...