Lohan Ratwatte
செய்திகள்இலங்கை

லொஹான் ரத்வத்தவை உடனடியாக பதவி நீக்குக! – கூட்டமைப்பு

Share

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச்செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது .

கடந்த 12 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இரண்டு அரசியல் கைதிகளை மிரட்டியுள்ளார்.

அத்துடன் அவர்களை துப்பாக்கி முனையில் மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் தனது ருவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இவ் விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ருவிட்டர் பதிவில், இராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் கைதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...