tamilni 43 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வெடித்துள்ள சிறு போர்

Share

இலங்கையில் வெடித்துள்ள சிறு போர்

இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் சிறு போர் வெடித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமது அமைச்சர்கள், தங்களது பணிகளுக்கு இடம் தர மறுப்பதாக இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் தங்களுக்கு உரிய நல்ல வாகனங்களோ அல்லது பிற வசதிகளோ வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தீவிரமாகியுள்ளதை அடுத்து, ஜனாதிபதி விக்ரமசிங்க இன்று(04.09.2023) ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்காக இராஜாங்க அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் தமது அமைச்சகங்களுக்கு செயலாளர்கள் இல்லை எனவும் பல பிரச்சினைகளை இராஜாங்க அமைச்சர்கள் எதிர்கொள்கின்றனர்.

மேலும், நாளைய கூட்டத்திற்கு பின்னர் எந்த நேரத்திலும் சிறிய அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படலாம் என்று ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...