tamilni 43 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வெடித்துள்ள சிறு போர்

Share

இலங்கையில் வெடித்துள்ள சிறு போர்

இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் சிறு போர் வெடித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமது அமைச்சர்கள், தங்களது பணிகளுக்கு இடம் தர மறுப்பதாக இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் தங்களுக்கு உரிய நல்ல வாகனங்களோ அல்லது பிற வசதிகளோ வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தீவிரமாகியுள்ளதை அடுத்து, ஜனாதிபதி விக்ரமசிங்க இன்று(04.09.2023) ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்காக இராஜாங்க அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் தமது அமைச்சகங்களுக்கு செயலாளர்கள் இல்லை எனவும் பல பிரச்சினைகளை இராஜாங்க அமைச்சர்கள் எதிர்கொள்கின்றனர்.

மேலும், நாளைய கூட்டத்திற்கு பின்னர் எந்த நேரத்திலும் சிறிய அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படலாம் என்று ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...