rtjy 14 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

சஜித்தும் அநுரவும் இணைய வேண்டும் : டிலான்

Share

சஜித்தும் அநுரவும் இணைய வேண்டும் : டிலான்

சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர் என்ற இணக்கப்பாட்டுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் தயாராக வேண்டும் என்று சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது.

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-

மகிந்த மற்றும் ரணிலால் இணைந்து செயற்பட முடியுமென்றால், அநுர, சஜித்தால் ஏன் இணைந்து செயற்பட முடியாது?

ஒன்று சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர், அவ்வாறு இல்லாவிட்டால் அநுர ஜனாதிபதி, சஜித் பிரதமர் என்ற இணக்கப்பாட்டுடனேயே அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

அதற்குச் சுதந்திர மக்கள் சபையின் ஆதரவும் வழங்கப்படும். தனித்துச் செயற்படுவதைவிட கூட்டாகச் செயற்படுவதே சிறந்தது என்றார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...