rtjy 14 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

சஜித்தும் அநுரவும் இணைய வேண்டும் : டிலான்

Share

சஜித்தும் அநுரவும் இணைய வேண்டும் : டிலான்

சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர் என்ற இணக்கப்பாட்டுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் தயாராக வேண்டும் என்று சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது.

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-

மகிந்த மற்றும் ரணிலால் இணைந்து செயற்பட முடியுமென்றால், அநுர, சஜித்தால் ஏன் இணைந்து செயற்பட முடியாது?

ஒன்று சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர், அவ்வாறு இல்லாவிட்டால் அநுர ஜனாதிபதி, சஜித் பிரதமர் என்ற இணக்கப்பாட்டுடனேயே அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

அதற்குச் சுதந்திர மக்கள் சபையின் ஆதரவும் வழங்கப்படும். தனித்துச் செயற்படுவதைவிட கூட்டாகச் செயற்படுவதே சிறந்தது என்றார்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...