2 14 1 scaled
உலகம்செய்திகள்

மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்:100 விமானங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

Share

மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்:100 விமானங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 18 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளின் வான் தாக்குதலும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது.

அதிலும் ரஷ்ய தலைநகர் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் சமீபத்தில் நாட்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட கருத்தில், ரஷ்ய நிலப்பரப்பு மீதான தாக்குதல் போரில் தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதனால் கிட்டத்தட்ட 100 விமானங்கள் தாமதம் அடைந்துள்ளன.

இது தொடர்பாக மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ள தகவலில், நகரை நோக்கி வந்த உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது, இதனால் 103 விமானங்கள் ரஷ்ய தலைநகரில் இருந்து வெளியேற முடியாமல் போனது.

வ்னுகோவோவில் இருந்து பிற புறப்பட வேண்டிய 34 விமானங்கள் இதனால் தாமதம் ஆனதுடன், 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல  டொமோடெடோவோவில் 63 விமானங்கள், ஷெரெமெட்டியோவில் 6 விமானங்கள் தாமதமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...