tamilni 380 scaled
இலங்கைசெய்திகள்

இனவாத நாடகத்தால் ஆட்சியைப் பிடிக்க முயல்வோருக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: சஜித்

Share

இனவாத நாடகத்தால் ஆட்சியைப் பிடிக்க முயல்வோருக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: சஜித்

ஆட்சியைப் பிடிப்பதற்காக 2019 இல் அரங்கேற்றிய இனவாத நாடகத்தின் இரண்டாவது பாகத்தைத் தற்போது அரங்கேற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறானவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“13 என்கின்றனர், 13 பிளஸ் என்கின்றனர். இவை யாவும் போலியான வாக்குறுதிகளாகவே உள்ளன.

ஜனாதிபதி கனவில் உள்ள சிலர், தமது பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ளவும், சுகபோக வாழ்வுக்காகவும் மக்களை ஏமாற்றுவதற்கு முற்படுகின்றனர்.

2019 இல் மக்களை எவ்வாறு ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தார்களோ அதன் இரண்டாவது பாகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

இனவாத ரீதியிலான பிரசாரங்கள் இதன் ஓர் அங்கமாகும். இனவாதம், மதவாதம் பரப்பி ஆட்சியைப் பிடித்தவர்களை மக்கள் விரட்டியடித்தனர் என்பதை நினைவில் வைத்துச் செயற்பட்டால் சிறந்தது.” என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
26 697b3f976a4cc
செய்திகள்உலகம்

விஷ்மாவின் உயிரைக் காப்பாற்ற மூன்று வாய்ப்புகள் இருந்தன: ஜப்பானிய நீதிமன்றத்தில் மருத்துவர் அதிரடி சாட்சியம்!

ஜப்பானின் நாகோயா குடிவரவு தடுப்பு நிலையத்தில் 2021-இல் உயிரிழந்த இலங்கைப் பெண் விஷ்மா சந்தமாலியின் மரணம்...

1001225020
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் 40 வருட காலக் காத்திருப்பு முடிவுக்கு வந்தது: பற்றைக்காடாக இருந்த ‘விதானையார் வீதி’ விவசாயிகளுக்காக மீளத் திறப்பு!

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு பகுதியில், கடந்த 40 வருடங்களாகக்...

accident 1 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பளையில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: 63 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே பலி!

கிளிநொச்சி மாவட்டம், பளை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பளை நகர் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில்...

image 666aa8c037
செய்திகள்இலங்கைபிராந்தியம்

6-ஆம் தர மாணவர்களுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தம்: 2030 வரை தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்படும் எனப் பிரதமர் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், இந்த ஆண்டு 6-ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் உள்வாங்குவதற்கான விசேட...