7 10 scaled
உலகம்செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி  கொலை வழக்கில் புதிய தகவல்

Share

சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி  கொலை வழக்கில் புதிய தகவல்

சர்ரே பகுதியில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி தொடர்பில், பொலிசார் வெளியிட்ட புதிய தகவலில், சிறுமியின் இறப்பு குறித்து பாகிஸ்தானில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்டு 10ம் திகதி சர்ரே பொலிசார் முன்னெடுத்த சோதனையில், குடியிருப்பு ஒன்றில் இருந்து 10 வயது சிறுமி சாரா ஷெரீப் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால், தொடர்புடைய தகவலை பாகிஸ்தானில் இருந்து சிறுமியின் தந்தையே லண்டன் பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பின்னரே சர்ரே பொலிசார் தொடர்புடைய முகவரிக்கு சென்று குடியிருப்பில் சோதனை முன்னெடுத்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் சிறுமியின் தந்தை உர்ஃபான் ஷெரீப், அவரது துணைவி பெய்னாஷ் படூல் மற்றும் உர்ஃபானின் சகோதரர் பைசல் மாலிக் ஆகியோரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த மூவரும் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிறுமி தொடர்பில் பாகிஸ்தானில் இருந்து உர்ஃபான் ஷெரீப் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சிறுமி சாராவின் மரணம் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 9ம் திகதி உர்ஃபான் ஷெரீப் உட்பட மூவர் இஸ்லாமாபாத்திற்குச் சென்றதாக நம்பப்படுகிறது.

இவர்களுடன் ஒரு வயது முதல் 13 வயது வரையிலான ஐந்து குழந்தைகளும் பயணம் செய்தனர் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக சர்ரே பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் புதிய சிக்கலாக, இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முறையான ஒப்படைப்பு ஒப்பந்தம் இல்லை எனவும், கோரிக்கை முன்வைக்கும் அடிப்படையில் முன்னர் பலர் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை சர்வதேச விசாரணை அமைப்புகளுடன் இணைந்து விசாரித்து வருவதாகவும் சர்ரே பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...