WhatsApp Image 2023 08 20 at 22.17.27 scaled
உலகம்செய்திகள்

உக்ரைனை பாடாய்படுத்தும் ரஷ்யா! 6 வயது சிறுமி உட்பட 7 பேர் ஏவுகணை தாக்குதலில் பலி

Share

உக்ரைனை பாடாய்படுத்தும் ரஷ்யா! 6 வயது சிறுமி உட்பட 7 பேர் ஏவுகணை தாக்குதலில் பலி

உக்ரைனிய நகரான செர்னிஹிவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு உக்ரைனிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்று நகரமான செர்னிஹிவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 வயது சிறுமி உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய நகர மேயர் ஒலெக்சாண்டர் லோமகோ, ரஷ்யாவின் இந்த ஏவுகணை தாக்குதல் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 லிருந்து 117 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மத விடுமுறையை கொண்டாடுவதற்காக தேவாலயத்திற்கு மக்கள் சென்று கொண்டு இருந்த போது இந்த தாக்குதல் அரங்கேறி இருப்பதாக உக்ரைனின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் 12 பேர் குழந்தைகள் என்றும், 10 பேர் பொலிஸ் அதிகாரிகள் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்வீடனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இருந்த உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து டெலிகிராமில் பதிவிட்டுள்ள கருத்தில், சதுக்கம், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தியேட்டர்கள் அடங்கிய எங்கள் செர்னிஹிவ் நகரத்தின் மையத்தில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.

சாதாரண சனிக்கிழமை தினத்தை ரஷ்யா வலியும் இழப்பும் மிகுந்த நாளாக மாற்றியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...