மதுபான போத்தல்களில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கர்கள்
இலங்கைசெய்திகள்

மதுபான போத்தல்களில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கர்கள்

Share

மதுபான போத்தல்களில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கர்கள்

மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டமை தொடர்பில் பதிவாகும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தில் எவ்வளவு பெரிய மதுபான நிறுவனம் குற்றவாளியாக இருந்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மதுபான தொழிற்சாலைகளையும் கண்காணிப்பதற்கு கலால் திணைக்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், கலால் திணைக்கள அதிகாரிகளின் தவறுகள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளில் கலால் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 8000 போலி மது போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னணியில் கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.

மதுபான நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை குறைக்க போலி ஸ்டிக்கர்கள் பயன்படுத்துவதால், கடந்த காலங்களில் மது வரி வருவாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...