SSRI LANKA
இலங்கைசெய்திகள்

தபால் சேவை – வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே!

Share

தபால் சேவை – வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே!

நாட்டில் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தபால் சேவைகள் இடம்பெறும் நாள்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதனை தபால்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அரசு பிரகடனப்படுத்திய நிலையில்  வாரத்தில் 6 நாள்கள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக அதனை பராமரித்துச் செல்ல கடுமையான தடைகள் ஏற்படுகின்றன.

தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் உடன்பாட்டுக்கு அமைய வாரத்தில் திங்கள், செவ்வாய் , வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாத்திரம் தபால் அலுவலகங்கள் திறக்கும் எனவும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் அலுவலகங்களை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை முதியோர் கொடுப்பனவுகள் உள்ளிட்ட கொடுப்பனவுகள் எதிர்வரும் 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 67abee737d4d3
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச சேவையில் 2,284 புதிய வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு: அமைச்சரவை அங்கீகாரம்! 

இலங்கை அரச சேவையில் தற்போது நிலவும் 2,284 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...