கராப்பிட்டிய வைத்தியசாலையில் பெரும் சிக்கல்
இலங்கைசெய்திகள்

கராப்பிட்டிய வைத்தியசாலையில் பெரும் சிக்கல்

Share

கராப்பிட்டிய வைத்தியசாலையில் பெரும் சிக்கல்

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான இதயத்தினுள் வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்களை விசேட சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கான இதயத்தினுள் வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை பிரிவில் பணியாற்றிய வைத்திய நிபுணர்கள் இருவரும் சேவையில் இருந்து விலகியுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எச்.டி.யு.ரங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைக்காக வரும் சிறுவர்கள் விசேட சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போதிய சத்திரசிகிச்சை அறை வசதிகள் மற்றும் அதிதீவிர சிகிச்சை வசதிகள் இல்லாத காரணத்தினால் இதய சத்திரசிகிச்சைக்கான நீண்ட காத்திருப்பு பட்டியல் உருவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
16 11
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல்: முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ‘எயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி...

15 11
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: FBI அறிக்கையை மேற்கோள் காட்டி சஞ்சீவ எதிரிமான்ன விளக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தேவாலயங்களைக் காட்ட சுரேஷ் சலே போன்ற ஒருவரின் உதவி...

14 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்: இயந்திரங்களுக்குச் சேதமில்லை என கோப் (COPE) குழு உறுதி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியினால், அங்குள்ள மின் உற்பத்தி...

13 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மொரட்டுவையில் திருமண நாளன்று இளைஞர் கொலை: மூவர் கைது!

மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை...